ஆஹா! வானில் ஓர் சத்தம் சத்தம்
எக்காள சத்தம் சத்தம்
எமையும் உயிர்ப்பிக்கும் சத்தம் சத்தம்
என் நேசரின் சத்தமல்லோ?
அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா . . .
சித்தம் செய்வோர் சத்தம் கேட்டு விழித்தெழுவார்
நித்தம் அவர் சமூகத்தில் அகமகிழ்வார்
எக்காளங்கள் தொனித்திடும் வேளை வந்ததே
எங்கள் ராஜா இயேசு ராஜா வந்திடுவாரே
காத்திருப்போர் எதிர்கொண்டு ஏறிச் செல்வாரே
எண்ணெயுடன் தீவட்டியும் கொண்டு செல்வாரே
ஆட்டுக்குட்டி கல்யாணத்தின் நாளும் வந்ததே
நேச மணவாட்டி தன்னை ஆயத்தம் செய்தாள்.