அலை அலையாய் தேவ நதி
அது ஜீவ நதி அது தூய நதி
நிரப்பிடுதே என்னை நிரப்பிடுதே
சுத்தமும் தூய்மையுமான ஜீவ நதி
ஆட்டுக்குட்டி சிங்காசனத்தினின்று
என்னில் பாயுதே.. என்னை நிரப்புதே
மகிழ்வும் சந்தோஷம் தரும் இன்ப நதி
ஆவியான கர்த்தரிடமிருந்து
உள்ளம் பொங்குதே நிரம்பி வழியுதே
புதுத் துருத்தி முதலாய்ப் பீறப்பண்ணும்
நேசத்தின் உச்சித அபிஷேகமே
பூரிப்படைந்தேன் துதித்து மகிழ்வேன்.