ஆளுகை செய்வேன், என் இயேசுவோடு
ஆச்சரியமான வலதுபக்கத்தில்
உன்னதத்தில், உயர்ஸ்தலத்தில்
அமர்ந்திருப்பேன் என் நேசருடனே
ஜெயம் கொண்டு, வல்லமையாய்
ஆளுகை செய்வேன் ஆளுகை செய்வேன்
துரைத்தனங்களும், அதிகாரங்களும்
எந்தன் கால்களின் கீழே!
அந்தகார வல்லமைகள் முறியடிப்பேன்
என்றும் ஜெயித்திடுவேன்!
கல்வாரி வெற்றி செயல்படுத்தி
சாத்தானை தோற்கடிப்பேன்
சர்ப்பங்களை, சிங்கங்களை மிதித்திடுவேன்
இயேசுவின் நாமத்தினால் – என்
சேனை அதிபன் முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
விசுவாச கேடகத்தை பிடித்துமே நான்
முன்நோக்கி முன் செல்லுவேன்
இவ்வுலகத்தின் பாடுகளெல்லாம்
சீக்கிரம் மறைந்திடுமே
கவலை இல்லையே, கண்ணீரும் இல்லையே
நேசரின் முகம் காணுவேன்.