Artists :
Album:
Praise Songs
Categories:
ஆதியில் ஏதேனில் ஆதாமுக்கேவாளை
ஆதியில் ஏதேனில் ஆதாமுக்கேவாளை
அருளிச் செய்தீரே
அவ்விதமாகவே அவ்விருபேரையும்
இணைத்தருள்வீரே
1. மங்களமாய் திருமறையைத் தொடங்கி
மங்களமாய் முடித்தீர் - மங்கள
மா மணவாளனாய் மைந்தரை
மாநிலத்தில் விடுத்தீர்
2. ஆபிரகாம் எலியேசர்தம் மன்றாட்டுக்
கருள் புரிந்தீரே - அங்ஙனமே இந்த
மங்களம் செழிக்க ஆசியருள்வீரே
3. கானாவூர் கலியாணம் கண்டு களித்த எம்
கர்த்தரே வந்திடுவீர் - காசினி மீதிவர்
நேசமாய் வாழ்ந்திட கிருபை செய்திடுவீர்
4. இன்பமும் துன்பமும் இம்மணமக்கள்
தாம் இசைந்து வாழ்ந்திடவே
அன்பர் உம் பாதம் ஆதாரம் என்றும்மை
அணுகச் செய்திடுவீர்