ஆட்கொண்ட தெய்வம்
திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகிறேன்
1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே - தினம் (3)
2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே - தினம்
3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே - என்னை விட்டு
4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே
5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோதமே
6. காயங்கள் ஆற்றி கண்ணீரை
துடைக்கும் நல்ல சமாரியனே