ஆவியோடு ஆராதிக்க
சுத்தம் தாரும் சுத்திகரியும்
சுத்திகரியும் சுத்திகரியும்
அனலாய் உம்மை ஆராதிக்க
ஆதி அன்பில் நிலைத்திருக்க
அக்கினி அபிஷேகம் தந்திடுமே
சுட்டெரிக்கும் தூய ஆவியினால்
தூய்மைப்படுத்தி துலங்கச் செய்யும்
எங்கும் உள்ளம் மகிழ்ந்திடவே
கல்வாரி நதியால் சுத்திகரியும்
கழுவிடுமே எமை கழுவிடுமே
பரிசுத்தமுள்ள பாத்திரமாய்
ஊழிய எல்லை விரிவடைய
உத்தமனே நீர் உதவி செய்யும்
கறைதிரையற்ற மணவாட்டியாய்
மகிமையில் என்னை சேர்த்துக்கொள்ளும்.