கர்த்தர் தரும் புது நாமத்தால் அழைக்கப்படுவாய்
கர்த்தர் தரும் அபிஷேகம் மேன்மைப்படுத்தும்
கீர்த்தியாக, புகழ்ச்சியாக, மேன்மையாக
உன்னை உயர்த்திடுவார்
உயிரோடிருக்கும் நாளெல்லாம்
ஒருவனும் உன்னை எதிர்த்து
நிற்பதில்லை, நிற்பதேயில்லை
ஒரு வழியாய் வருபவர்கள்
பல வழியாய் மறைவார்கள்
மோசேயோடு இருந்ததுபோல
உன்னோடு என்றும் இருந்திடுவார்
ஒருபோதும் விலகிடமாட்டார்
திடன் கொள்வாய் பெலன் கொள்வாய்
வல்லமையாக எழும்பிடுவாய்
தந்தையைப் போல்,
தாயைப்போல் ஆற்றி தேற்றி,
சுமந்திடுவார் உன்னை ஏந்திடுவார்
கிருபையினால் கரம்பிடித்தே
காலமெல்லாம் நடத்திடுவார் - 2