ஒருபோதும் விலகிடார்
ஒருநாளும் கைவிடார்-2
வழி காட்டும் தெய்வம் உண்டு
விழியற்ற என் வாழ்விலே-2
இருள் யாவும் நீக்கிடுவார்
புது வாழ்வு தந்திடுவார்-2
1.கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்
துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும்-2
ஒருபோதும் விலகிடார்
ஒருநாளும் கைவிடார்-2
2.காக்கும் தெய்வம் உண்டெனக்கு
கலங்கின நேரங்களில்(வேளைகளில்)-2
கரம் பிடித்து நடத்துவார்
கண்மணிபோல் காத்திடுவார்-2
3.பெலன் அளிக்கும் தேவன் உண்டு
பெலன் அற்ற வேளைகளில்-2
என் கிருபை போதும் என்றீர்
தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்)-2
4.வாக்குத்தத்தம் செய்த தேவன்
சொன்னதை நிறைவேற்றுவார்-2
நம்மோடிருந்து நடத்துவார்
முடிவு பரியந்தம் தங்கிடுவார்-2-ஒருபோதும்