பரம அழைப்பிற்கு பங்குள்ள பாத்திரமே
பரமன் இயேசுவையே நோக்கி ஓடுவாயே (பார்த்து)
வசனம் வழிகாட்டும், கிருபை காத்துக் கொள்ளும்
பதறாமல் ஓடுவாயே
ஆஹா! அல்லேலூயா! ஓஹோ ஓசன்னா!
மகிமை மகிழ்ச்சியே, ஜெயமே கிறிஸ்துவிலே
வாழ்க்கையில் உன்னோடு கூடவே வந்திடுவார்
ஓட்டம் ஜெயத்துடன் ஓடி முடித்திட வல்லமை ஈந்திடுவார்
வெள்ளம்போல நிந்தைகள் வந்தாலும்
கடலை அதட்டி, காற்றை அமர்த்தி, மறுகரை சேர்த்திடுவார்
கரடிகள், ஓநாய்கள், சிங்கமே சூழ்ந்தாலும்
கோலோடு தடியும் என்னைத் தேற்றிடும், நல்மேய்ப்பன் எனக்குண்டு
வருகையில் வந்திடுவார் வா என்று அழைத்திடுவார்
மகிமையின் மேலே மகிமையடைந்து, மறுரூபமாகிடுவேன்
வாழ்க்கையின் போர் முடிப்பேன், கிரீடங்கள் சூடிடுவேன்
நன்மையும், கிருபையும் என்னைத் தொடர்ந்திட வாழுவேன் நீடூழியாய்