பதறிடாதே கலங்கிடாதே
பரமன் இயேசு பாரில் உண்டே
1. தாய் தன் பிள்ளை மறந்திட்டாலும்
ஆண்டவரும் மறப்பாரோ
தகப்பன் பிள்ளை இரங்குவதுபோல்
அனுதினமும் இரங்குவார்
2. தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
தூக்கி உன்னை சுமப்பாரே
வழுவிடாமல் காக்கும் தேவன்
மாசற்றோறாராய் நிறுத்துவார்
3. ஜெபிப்பதற்கும் நினைப்பதற்கும்
மேலாய் ஜெயமே அளிப்பவர்
அறியா எட்டா காரியங்கள்
அனுதினமும் அறிவிப்பார்
4. உனக்காய் யுத்தம் செய்திடுவார்
உனக்காய் பரிந்தும் பேசுவார்
உனக்கு முன்னே அவரின் சமுகம்
உனக்காய் யாவும் செய்திடும்