உன்னதரே உன்னத பெலன் தாருமே
உன்னதங்களில் உம்மோடுறவாடிட
உள்ளம் ஏங்கிடுதே
ஆயிரங்களில் சிறந்தோரே
ஆத்துமாவின் நேசர் அவரே
ஆபத்தில் என் தோழரும் நீரே
ஆடிப்பாடி துதிப்பேன் என்றும்
ஏழை என்னை ஆசையுடனே
நேசர் இயேசு தேடி வந்தாரே
அளவற்ற கிருபையாலே
அளவின்றி நிரப்பினாரே
தேவசாயலாக மாறியே
தேவ அன்பால் நிறைந்திருப்பேன்
ஆத்தும நேச உச்சிதங்களை
நேசருக்கே ஈந்திடுவேன்
எண்ணிறந்த தூதர்களோடு
விண்ணில் நின்று போற்றி மகிழ்வேன்
கோடி கோடி ஆண்டுகளாக
தேவ லோகில் வாழ்ந்து சுகிப்பேன்