உன்னதத்தின் பெலனே உயர் ஸ்தலத்தின் நிழலே
உத்தமரின் துணையே என்னரும் இயேசு நாதா
வாழ்த்துகிறேன் உம்மைப் போற்றுகிறேன்
வாழ்நாளெல்லாம் உம்மில் மகிழுகிறேன்
ஆவியால் நிறைந்திடுமே அபிஷேகம் ஈந்திடுமே
அளவில்லா அக்கினியால் கொளுந்துவிட்டெரிந்திடவே
ஆத்தும தாகத்தினால் ஊழியஞ் செய்திடவே
ஆவியின் வரங்களினால் அடியேனை நிரப்பிடுமே
விண்ணப்ப ஆவியோடு மன்றாடி ஜெபித்திடவே
எண்ணெயை ஊற்றிடுமே எழும்பி நான் துலங்கிடவே
அருட்கொடை அத்தனையும் கிருபையாய் ஈந்திடவே
தேசத்தின் எல்லையெல்லாம் இயேசுவை அறிந்திடவே