வானப் பராபரனே இப்போ வாரும் எம்
மத்தியிலே - வந்து நின் திருக்கரத்தால்
எம்மை ஆசீர்வதியுமையா - எல்லா மகிமை
கனமும் துதியும் ஏற்றிட வாருமையா
பக்தரின் மறைவிடமே ஏழை மக்களின்
அதிபதியே - பாதமே கூடும் பாதகர் எமக்கு
பரிசுத்தமீயுமையா - வாக்கு மாறா
தேவா வாரும் வல்லமையால் நிறைக்க
கிருபாசனபதியே நின் கிருபையில்
நிலைத்திடவே - கஷ்டமதிலும்
நஷ்டமதிலும் நின் கருணையில் நின்றிடவே
நின் சக்தியோடு பக்தியில் நாம் பூரணராகிடவே
தாய் என்னை மறந்தாலும் - ஐயா நீர்
மறவாதிருக்க ஆவியினால் எம் உள்ளமதினில்
அக்கினி பற்றிடவே- யேகோவாவே
எங்களின் ராஜா எழுந்து வாருமையா
நினைத்திரா தினமதிலே எம் கர்த்தரே
வருவீரே - ஆவி ஆத்மா சரீரம் முற்றும்
மகிமையில் சேர்ந்திடவே - மாசில்லா
பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே
வாதை பிணி தீர எம் வாய்த்த மருந்தே நீர்
பாவ சாப ரோகமுற்றும் மாற்றிடும்
திருரத்தமே - கல்வாரியண்டை
பெற்றிட நாமும் விரைந்து ஏகிடவே
ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே
அன்பின் தயாளன் ஆனந்த பூமான் வரவே
இரண்டாம் முறையே - ஆசையோடு
காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய்