வருந்தி அழைத்திடும் வல்லவர் சத்தம் கேளாயோ
வா என்று வாசலில் நிற்கிறார் வாராயோ
கவலை கண்ணீர் நீக்கி துன்பம் துக்கம் அவர் போக்குவார்
நீ ஏங்கி எதிர்பார்க்கும் நிம்மதி தந்திடுவார்
பாவபாரம் ஏற்று சாப நோய்கள் குணமாக்குவார்
தோல்வியை நீக்கியே வெற்றியாய் மாற்றிடுவார்
கல்வாரி மேட்டிலே குருதி உனக்காக சிந்தினார்
தம் ஜீவனிலும் உன்னை அதிகமாய் நேசித்தார்.